தமிழ் மன்றம்

பயிலரங்கம்

காணவே வந்தேன்2019

SRM வள்ளியம்மை   பொறியியல் கல்லூரியில், பாரிவேந்தர்  மாணவர் தமிழ்மன்றத்தின் சார்பாக  மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில்காணவேவந்தேன் -2019” என்ற பெயரில்,பல்வேறு கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளாக கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், கவிதைப்போட்டி, சொல் விளையாட்டு போன்ற போட்டிகள் 14.09.19 சனிக்கிழமையன்று  நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்புவிருந்தினராக, இலக்கியப் பேச்சாளரும் திரைப்பட நடிகருமான நாவுக்கரசர் உயர்திரு நாஞ்சில் சம்பத் ஐயா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இவர் தனது சிறப்புரையில் இது போன்ற தமிழ் நிகழ்வை நடத்தும் உங்களுக்கு நான் வள்ளல் பாரியாக இருந்திருந்தால் தேரை கொடுத்திருப்பேன்; குமணவள்ளலாக இருந்திருந்தால் என் தலையை கொடுத்திருப்பேன்; ஆனால் என்னிடம் தமிழ் தான் இருக்கிறது,அந்த தமிழையே தந்து விடுகிறேன் என்று கூறினார்.மேலும் தமிழ் தான் அனைத்திற்கும் மூத்த மொழி என்றும், நாம் இக்காலத்தில் தேநீரை சூடாக வைக்க பயன்படுத்தும் குடுவையை அக்காலத்திலேயே நம் தமிழர்கள் அதை பயன்படுத்தி இருக்கிறார்கள் என தமிழின் பெருமையையும்,தமிழர்களின் பெருமையையும் எடுத்துரைத்தார்.

காணவேவந்தேன்-2019 நிகழ்வானது, SRM வள்ளியம்மைபொறியியல் கல்லூரியின் இயக்குநரும் மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழத்தின் இணைத்துணை வேந்தருமான முனைவர்.தி.பொ.கணேசன் ஐயா அவர்கள் தலைமையில் மற்றும் SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் முதல்வர், முனைவர். பா.சிதம்பரராஜன் அவர்களின் வழிகாட்டுதலில் நிகழ்வானது நடைபெற்றது.
SRM வள்ளியம்மை  பொறியியல் கல்லூரியின்  துணை முதல்வர், முனைவர். .முருகன் அவர்கள் போட்டிகளின் துவக்க விழாவில் முன்னிலையுரை மற்றும் வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் நிகழ்வில், பாரிவேந்தர் மாணவ மன்ற ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் திரு. .சண்முகம்  அவர்கள் அறிமுக உறையாற்றினார்.


 காணவே வந்தேன் 2018
உலக எழுத்தறிவு தினத்தையொட்டி வள்ளியம்மை   பொறியியல் கல்லூரியில், பாரிவேந்தர்  மாணவர் தமிழ்மன்றத்தின் சார்பாக  மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில்காணவேவந்தேன் -2018” என்ற பெயரில்,பல்வேறு கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளாக கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், கவிதைப்போட்டி, சொல் விளையாட்டு போன்ற போட்டிகள் 08.09.18 சனிக்கிழமையன்று  நடைபெற்றது.

காணவேவந்தேன்-2018 நிகழ்வானது, வள்ளியம்மை  பொறியியல் கல்லூரியின் இயக்குநரும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழத்தின் தமிழ்பேராயத் தலைவரும்,மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழத்தின் இணைத்துணை வேந்தருமான முனைவர்.தி.பொ.கணேசன் ஐயா அவர்கள் வழிகாட்டுதலில் மற்றும் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் முதல்வர், முனைவர். பா.சிதம்பரராஜன் அவர்களின் தலைமையில் நிகழ்வானது நடை பெற்றது.

வள்ளியம்மை  பொறியியல் கல்லூரியின்  துணை முதல்வர், முனைவர். .முருகன் அவர்கள் போட்டிகளின் துவக்க விழாவில் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்வில் சிறப்புவிருந்தினராக அகில இந்திய வானொலி, சென்னையின் மேனாள் இயக்குநரும், மயிலை திருவள்ளுவர் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனச்செயலருமான சேவாரத்னா, கலைமாமணி, முனைவர் . சேயோன், ஐயா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் நிகழ்வில், பாரிவேந்தர் மாணவ மன்ற ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்  திரு. .சண்முகம்  அவர்கள் அறிமுக உறையாற்றினார்.



Post a Comment

0 Comments